Monday, October 30, 2017


    முன்பனிக் காலங்கள்...


 மன அதிர்வுகளை ஏற்படுத்தியபடி சென்றுகொண்டே இருக்கிறது காலம். நிலையாக நின்று கடந்தவற்றை அசைபோடுவதற்காகவோ ரசிப்பதற்கோ இந்த எந்திரமயமான காலம் அனுமதிப்பதே இல்லை. வலிகளோடு மட்டுமல்லாமல் ஏராளமான  குதூகலங்களோடும் மறைந்துவிட்ட காலங்களை இன்று திரும்பி பார்த்தால் அவை  சொல்லிச்செல்லும் கதைகள் ஏராளம். 

    60 மற்றும் 70 இரண்டு பத்தாண்டுகளிலும் வாழ்ந்தவர்கள் வாழ்க்கை நிறைந்து கிடக்கிறது. நிலவொளியில் பேசிய கதைகள் ஏராளம் அவர்களின் அனுபவங்களில் குவிந்து கிடக்கின்றன. 80களின்  இளைஞர்கள் அவர்களின் வாழ்வியல் கொண்டாட்டங்கள் திரைப்படங்களில் , புத்தகங்களில் நிறைந்து கிடக்கின்றன. 90களின் வாழ்வியல் பதிவுகள் குறைவாகவே பதியப்பட்டு இருக்கின்றன . இந்த கட்டுரை தொடர்ச்சியாக 90களின் வாழ்வியல் குறித்த பதிவாகவே வெளிவரும். மனதின் ஆழத்தில் சென்று கடந்தகால புதையல்களை மெல்ல மீட்டுவரும் ஒரு முயற்சி.

   ஏன் 90களின் வாழ்வியல் ? நிறைய இருக்கிறது சொல்வதற்கு 80களின் வாழ்வியல் மெல்லிசை என்றால் புது நூற்றாண்டின் 2000 வாழ்வியல் அதிரடி சப்தங்களில் மூழ்கியது எனலாம். இந்த இரண்டிற்கும் இடையே யாராலும் கேட்கப்படாத  இசையாக 90 களின் வாழ்வியல் இருந்தது. வாழ்வதற்காக உயிர் வாழ்ந்த 80களுக்கும் , உயிர் வாழ்வதற்க்காக வாழும் 2000களுக்கும் மத்தியில் 90களின் காலம் ஒரு கொண்டாட்டமாகவே இருந்தது. 

  முன்னோடியாக கண்ணால் கண்ட ஒரு வாழ்க்கை இருந்தது எதிர்பாராவிதமாக உலகமயமாக்கலின் தாக்கம் ஒரு சூறாவளியை போல் நின்றும் , மோகினியை போல ஆசை காட்டியும் எதிர்மறித்து நின்றது. ஒரு தலைமுறையின் வாழ்க்கை பாதையின் மாறுதலுக்கு பலியானோம்.  அதில் ஆறுதல் என்னவென்றால் உலகமயமாக்கல் தாக்கத்தின் முன்பு வாழ்க்கையின் அனைத்து கொண்டாட்டங்களும் எங்களுக்கு கிட்டியிருந்தன . பெருமையாக சொல்லலாம் பால்ய பருவத்தில் வாழ்க்கையை வாழ்ந்த கடைசி தலைமுறையின் எச்சங்கள்  90களின் சிறுவர்கள்.


ட்ட பார்த்த நீராயில்லை

இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்தது 

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்தது 

-வி. அமலன் ஸ்டான்லி.
"மேய்வதும் மேய்ப்பதும் யாது..." 


ஆழ்மனதிலும் , நினைவுகளிலும் சேகரித்த முத்துக்களோடு சந்திக்கிறேன் விரைவில் .