Saturday, June 15, 2013

கம்பம் பள்ளத்தாக்கும் கண்ணகி கோவில் பயணமும்.....பகுதி-2

கம்பம் நகரில் நாங்கள் ஜீப்பில் கிளம்புவதற்கு காலை 5:30 ஆகிவிட்டது. நிறைய ஜீப்புகள் அங்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர் . இங்கிருந்து கண்ணகி கோவிலுக்கு செல்ல 75 ருபாய் வாங்கினார் எங்கள் ஜீப் ஓட்டுனர். பின்பு தெரிந்தது அது நியாயமான,குறைவான கட்டணமே. கம்பம், கூடலூரில் தமிழ்நாடு சோதனை சாவடியில் பெர்மிட் வாங்கிக்கொண்டு குமுளி சென்றோம்.எங்களது முதல் நாள் திட்டமானது முதலில் குமுளி சென்று பின்பு அங்கிருந்து கண்ணகி கோவிலுக்கு செல்வது. கம்பத்தில் இருந்து ஜீப்பில் சென்றது எங்களது அதிர்ஷ்டம் என்ற எண்ணம் குமுளியில் பக்தர்கள் கூட்டத்தை கண்டவுடன் ஏற்பட்டது. 

கேரளா அரசு நிறைய சிறப்பு பேருந்துகளை இயக்கி கேரளாவின் சுற்று வட்டாரத்தில் இருந்து பக்தர்களை திரட்டியிருந்தனர் . நாங்கள் நேராக குமுளி சென்றிருந்தால் கண்டிப்பாக குறைந்தது 4 மணி நேரம் வாகனத்திற்கு காத்திருக்க நேர்ந்திருக்கும். குமுளியில் இருந்து வனத்துறை அனுமதி வாங்கியபின் அங்கிருந்து வனத்துறை சோதனை சாவடியில் வாகனம் முழுமையும் சோதனை செய்தார்கள். எத்தனை பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் என்று முழுமையான சோதனை. பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக்கொண்டார்கள் , குடிதண்ணீர் பாட்டில்கள் என்று எதையும் விடவில்லை. கூடவந்திருந்தவர் ஒரு எலேக்ட்ரிசியன் அவர் சட்டையில் சொருகி இருந்த டெஸ்ட்டர் கூட அவர்களிடம் தப்பவில்லை. குழந்தைகளை கூட்டிவந்தவர்களுக்கு மட்டும் குடிதண்ணீர் பாட்டில்கள் அனுமதி.மிக சிறந்த ஏற்பாடு. தீப்பெட்டி, சிகரெட் என்று எதையும் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.10 அடிக்கு ஒரு காவலர் வீதம் ,வனத்தினுள் 50 மீட்டர் அளவில் ஒருவர் என்று கேரளா வனத்துறை பாதுகாப்பிற்கு ஏற்ப்பாடு செய்திருந்தனர் . இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் கேரளா அரசு நமது கண்ணகியை மங்கள தேவி என்றே அழைத்து கண்ணகி வழிபாட்டை துர்க்கை வழிபாடாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் . குமுளியின் சுற்று வட்டாரத்திற்கு சிறப்பு பேருந்துகள் ஏற்ப்பாடு செய்த கேரளா போக்குவரத்து துறை தப்பி தவறி கூட தமிழகத்தில் ஒரு பேருந்து கூட இயக்கவில்லை .

 தமிழகத்தில் இருந்து ஒரு மலைப்பாதை மட்டுமே நடக்ககூடிய ஒற்றையடி பாதையாக இருக்கிறது. மலை ஏறுவது மிக சிரமம் நகரத்தில் வசிக்ககூடியவர்களுக்கு .கிட்டத்தட்ட 4 மலைகள் கடந்து செல்லவேண்டும் ,தமிழகத்தில் இருந்து செல்வதென்றால். ஆனாலும் சிறு வயது ஏன் கைக்குழந்தைகளை கூட தூக்கிக்கொண்டும் ஆண்கள்,பெண்கள் மற்றும் , வயதான பாட்டிகள் , தாத்தாக்கள் கூட மலை ஏறுவதை கண்டேன். கம்பத்தில் இருந்து கூடலூர் கடந்து வலதுபுறம் செல்லும் பளியன்குடி சென்றால் அங்கிருந்து ஒரு ஒற்றையடி பாதை செல்கிறது. மிக கடினமாகவும் , நீண்ட நேரம் செல்லும்படியும் இருப்பதால் சற்று வயதானவர்கள் ,பெண்கள் நீண்ட தூரம் நடக்க சிரமப்படுபவர்கள் இதை தவிர்க்கவும்.  பளியன்குடியில் இருந்து நீங்கள் மலையேறினால் ,எப்படி பார்த்தாலும் கிட்டத்தட்ட 5 மணி நேரங்களுக்கு குறையாது. எங்களது திட்டமானது போகும்போது ஜீப்பில் சென்றும் வரும்போது மலைப்பாதையில் இறங்கி வரும்படியும் அமைத்துக்கொண்டோம் .

 மீண்டும் ஜீப்பில் என்னுடன் பயணியுங்கள்....ஒரு கால்மணி நேர மலைப்பயணம், சற்றே மேடு,பள்ளமுமான சாலை அடர்ந்த வனப்பகுதி என்று இந்த பயணம் நீண்டது . இந்த பயணத்தில் கேரளா வனப்பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை . வாகனத்தை நிறுத்தக்கூட அனுமதி இல்லை. கேரளத்தின் வனத்துறை காவலர்கள் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள் .தனியார் வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கப்படுகிறது . ஜீப்புகளுக்கு மட்டும் அனுமதி அதுவும் குமுளியில் வனத்துறை அனுமதி பெற்றால் மட்டுமே. சொந்த வாகனங்கள் ,இரு சக்கர வாகனங்கள் என்று எதற்கும் அனுமதி இல்லை .

 அரை மணி நேர பயணத்திற்கு பின்....


திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்

அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்.
 பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்! பழமையினால் சாகாத இளையவள் காண்!
 நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.

 பிரமாண்டம் .இந்த சொல்லை தவிர ஏதும் என் வர்ணனைகளுக்கு பொருந்தாது. நான் கண்ட முதல் காட்சி .மிக பிரமாண்டமான மலையின் மீது நீங்கள் இருக்கிறீர்கள் . அழகின் தரிசனம் , ஓங்கி உயர்ந்த மலைகளின் மீது உங்கள் சாலை பயணம் இன்னும் 10 நிமிடங்கள் தொடர்கிறது. மனம் மிக ஆவலாக இருக்கிறது மலையின் உச்சியை காண , கண்ணகி கோவிலை காண...

 கோவிலுக்கு செல்லும் வழி 

கோவிலை சுற்றி புல்வெளிகள் 

நீண்ட பயணப்பாதை ..கோவிலின் அருகிலிருந்து 

பிரமாண்டமான ஒரு மலைக்குன்று

நீண்ட பயணப்பாதை ..கோவிலின் அருகிலிருந்து 

நீண்ட பயணப்பாதை ..கோவிலின் அருகிலிருந்து 

 மலைக்குன்று ,அழகான ஒரு காட்சி 



பகுதி மூன்றில் கண்ணகி கோவிலின் தரிசனம் பற்றி விரிவாக எழுதுகிறேன் ...உங்கள் விமரிசனங்கள்,கருதுக்கள் தேவை.....

No comments:

Post a Comment